thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalஇடுக்கண் அழியாமைItukkan Azhiyaamai
குறள் 622

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.

Vellath Thanaiya Itumpai Arivutaiyaan

Ullaththin Ullak Ketum

Deluging sorrows come to nought When wise men face them with firm thought

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

SP (சாலமன் பாப்பையா)

வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.

MK (மு.கருணாநிதி)

வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்

Couplet

Though sorrow, like a flood, comes rolling on,When wise men's mind regards it,- it is gone

Explanation

A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow