thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalஇடுக்கண் அழியாமைItukkan Azhiyaamai
குறள் 621

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

Itukkan Varungaal Nakuka Adhanai

Atuththoorvadhu Aqdhoppa Thil

Laugh away troubles; there is No other way to conquer woes

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.

MK (மு.கருணாநிதி)

சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்

Couplet

Smile, with patient, hopeful heart, in troublous hour;Meet and so vanquish grief; nothing hath equal power

Explanation

If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow