thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalஆள்வினை உடைமைAalvinaiyutaimai
குறள் 620

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.

Oozhaiyum Uppakkam Kaanpar Ulaivindrith

Thaazhaadhu Ugnatru Pavar

Tireless Toiler's striving hand Shall leave even the fate behind

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.

SP (சாலமன் பாப்பையா)

மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.

MK (மு.கருணாநிதி)

``ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்

Couplet

Who strive with undismayed, unfaltering mind,At length shall leave opposing fate behind

Explanation

They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back