thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalமடி இன்மைMatiyinmai
குறள் 605

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்.

Netuneer Maravi Matidhuyil Naankum

Ketuneeraar Kaamak Kalan

To lag, forget, idle and doze These four are pleasure boats of loss

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

SP (சாலமன் பாப்பையா)

காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.

MK (மு.கருணாநிதி)

காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!

Couplet

Delay, oblivion, sloth, and sleep: these fourAre pleasure-boat to bear the doomed to ruin's shore

Explanation

Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction