குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
Kutimatindhu Kutram Perukum Matimatindhu
Maanta Ugnatri Lavarkku
Who strive not high, sunk deep in sloth Ruin their house by evil growth
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.
SP (சாலமன் பாப்பையா)
சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.
MK (மு.கருணாநிதி)
சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்
Couplet
His family decays, and faults unheeded thrive,Who, sunk in sloth, for noble objects doth not strive
Explanation
Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions