thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalமடி இன்மைMatiyinmai
குறள் 603

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

குடிமடியும் தன்னினும் முந்து.

Matimatik Kontozhukum Pedhai Pirandha

Kutimatiyum Thanninum Mundhu

The fool who fosters sluggishness Before he dies ruins his house

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.

SP (சாலமன் பாப்பையா)

விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.

MK (மு.கருணாநிதி)

அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்

Couplet

Who fosters indolence within his breast, the silly elf!The house from which he springs shall perish ere himself

Explanation

The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead