thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalமடி இன்மைMatiyinmai
குறள் 606

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது.

Patiyutaiyaar Patramaindhak Kannum Matiyutaiyaar

Maanpayan Eydhal Aridhu

With all the wealth of lords of earth The slothful gain nothing of worth

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

SP (சாலமன் பாப்பையா)

நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.

MK (மு.கருணாநிதி)

தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்

Couplet

Though lords of earth unearned possessions gain,The slothful ones no yield of good obtain

Explanation

It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it