thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகண்ணோட்டம்Kannottam
குறள் 580

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

Peyakkantum Nanjun Tamaivar Nayaththakka

Naakarikam Ventu Pavar

Men of graceful courtesy Take hemlock and look cheerfully

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.

SP (சாலமன் பாப்பையா)

எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்.

MK (மு.கருணாநிதி)

கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்

Couplet

They drink with smiling grace, though poison interfused they see,Who seek the praise of all-esteemed courtesy

Explanation

Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them