thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalஒற்றாடல்Otraatal
குறள் 581

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்

தெற்றென்க மன்னவன் கண்.

Otrum Uraisaandra Noolum Ivaiyirantum

Thetrenka Mannavan Kan

A king should treat these two as eyes The code of laws and careful spies

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

SP (சாலமன் பாப்பையா)

ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.

MK (மு.கருணாநிதி)

நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்

Couplet

These two: the code renowned and spies,In these let king confide as eyes

Explanation

Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed