thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalவெருவந்த செய்யாமைVeruvandhaseyyaamai
குறள் 570

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது

இல்லை நிலக்குப் பொறை.

Kallaarp Pinikkum Katungol Adhuvalladhu

Illai Nilakkup Porai

The crushing burden borne by earth Is tyrants bound to fools uncouth

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.

MK (மு.கருணாநிதி)

கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும் அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை

Couplet

Tyrants with fools their counsels share:Earth can no heavier burthen bear

Explanation

The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds)