thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalவெருவந்த செய்யாமைVeruvandhaseyyaamai
குறள் 569

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்

வெருவந்து வெய்து கெடும்.

Seruvandha Pozhdhir Siraiseyyaa Vendhan

Veruvandhu Veydhu Ketum

The king who builds not fort betimes Fears his foes in wars and dies

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.

SP (சாலமன் பாப்பையா)

நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.

MK (மு.கருணாநிதி)

முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்

Couplet

Who builds no fort whence he may foe defy,In time of war shall fear and swiftly die

Explanation

The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish