thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகண்ணோட்டம்Kannottam
குறள் 571

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு.

Kannottam Ennum Kazhiperung Kaarikai

Unmaiyaan Untiv Vulaku

Living in the world implies The bounteous dame of benign eyes

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

SP (சாலமன் பாப்பையா)

முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.

MK (மு.கருணாநிதி)

இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது

Couplet

Since true benignity, that grace exceeding great, residesIn kingly souls, world in happy state abides

Explanation

The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour