thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகொடுங்கோன்மைKotungonmai
குறள் 558

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா

மன்னவன் கோற்கீழ்ப் படின்.

Inmaiyin Innaadhu Utaimai Muraiseyyaa

Mannavan Korkeezhp Patin

To have is worse than having not If ruler is unjust despot

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

SP (சாலமன் பாப்பையா)

தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.

MK (மு.கருணாநிதி)

வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது

Couplet

To poverty it adds a sharper sting,To live beneath the sway of unjust king

Explanation

Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice