thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகொடுங்கோன்மைKotungonmai
குறள் 559

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.

Muraikoti Mannavan Seyyin Uraikoti

Ollaadhu Vaanam Peyal

The sky withdraws season's shower If the king misuses his power

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

SP (சாலமன் பாப்பையா)

ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.

MK (மு.கருணாநிதி)

முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது

Couplet

Where king from right deflecting, makes unrighteous gain,The seasons change, the clouds pour down no rain

Explanation

If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers