thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகொடுங்கோன்மைKotungonmai
குறள் 557

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்

அளியின்மை வாழும் உயிர்க்கு.

Thuliyinmai Gnaalaththirku Etratre Vendhan

Aliyinmai Vaazhum Uyirkku

Dry like the earth without rainfall Is graceless king to creatures all

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

SP (சாலமன் பாப்பையா)

மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.

MK (மு.கருணாநிதி)

மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்

Couplet

As lack of rain to thirsty lands beneath,Is lack of grace in kings to all that breathe

Explanation

As is the world without rain, so live a people whose king is without kindness