thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகொடுங்கோன்மைKotungonmai
குறள் 554

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு.

Koozhung Kutiyum Orungizhakkum Kolkotich

Choozhaadhu Seyyum Arasu

The king shall wealth and subjects lose If his sceptre he dares abuse

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.

SP (சாலமன் பாப்பையா)

மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.

MK (மு.கருணாநிதி)

நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்

Couplet

Whose rod from right deflects, who counsel doth refuse,At once his wealth and people utterly shall lose

Explanation

The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects