அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
Allarpattu Aatraadhu Azhudhakan Neerandre
Selvaththaith Theykkum Patai
Groaning tears caused by tyrant's sway File the royal wealth away
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.
SP (சாலமன் பாப்பையா)
தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.
MK (மு.கருணாநிதி)
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்
Couplet
His people's tears of sorrow past endurance, are not theySharp instruments to wear the monarch's wealth away
Explanation
Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?