நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
Naatorum Naati Muraiseyyaa Mannavan
Naatorum Naatu Ketum
Spy wrongs daily and do justice Or day by day the realm decays
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.
SP (சாலமன் பாப்பையா)
நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.
MK (மு.கருணாநிதி)
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்
Couplet
Who makes no daily search for wrongs, nor justly rules, that kingDoth day by day his realm to ruin bring
Explanation
The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin