கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
Kolaiyir Kotiyaarai Vendhoruththal Paingoozh
Kalaikat Tadhanotu Ner
Killing killers, the king, behold Weeds removes from cropful field
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.
SP (சாலமன் பாப்பையா)
கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.
MK (மு.கருணாநிதி)
கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்
Couplet
By punishment of death the cruel to restrain,Is as when farmer frees from weeds the tender grain
Explanation
For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn