thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalசெங்கோன்மைSengonmai
குறள் 549

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில்.

Kutipurang Kaaththompik Kutram Katidhal

Vatuvandru Vendhan Thozhil

Save his subjects and chide the wrong Is flawless duty of a king

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.

SP (சாலமன் பாப்பையா)

அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.

MK (மு.கருணாநிதி)

குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்

Couplet

Abroad to guard, at home to punish, bringsNo just reproach; 'tis work assigned to kings

Explanation

In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime