thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகொடுங்கோன்மைKotungonmai
குறள் 551

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து.

Kolaimerkon Taarir Kotidhe Alaimerkontu

Allavai Seydhozhukum Vendhu

The unjust tyrant oppressor Is worse than cruel murderer

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

SP (சாலமன் பாப்பையா)

குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.

MK (மு.கருணாநிதி)

அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்

Couplet

Than one who plies the murderer's trade, more cruel is the kingWho all injustice works, his subjects harassing

Explanation

The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer