thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalபொச்சாவாமைPochchaavaamai
குறள் 538

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

Pukazhndhavai Potrich Cheyalventum Seyyaadhu

Ikazhndhaarkku Ezhumaiyum Il

Do what the wise commend as worth If not, for seven births no mirth

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.

MK (மு.கருணாநிதி)

புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும் அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை

Couplet

Let things that merit praise thy watchful soul employ;Who these despise attain through sevenfold births no joy

Explanation

Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects and fails to perform them, for him there will be no (happiness) throughout the seven births