thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalபொச்சாவாமைPochchaavaamai
குறள் 539

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

Ikazhchchiyin Kettaarai Ulluka Thaandham

Makizhchchiyin Maindhurum Pozhdhu

When joy deludes, their fate recall Whom negligence has made to fall

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க.

MK (மு.கருணாநிதி)

மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்

Couplet

Think on the men whom scornful mind hath brought to nought,When exultation overwhelms thy wildered thought

Explanation

Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy