thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalபொச்சாவாமைPochchaavaamai
குறள் 537

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்

கருவியால் போற்றிச் செயின்.

Ariyaendru Aakaadha Illaipoch Chaavaak

Karuviyaal Potrich Cheyin

With cautious care pursue a thing Impossible there is nothing

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.

MK (மு.கருணாநிதி)

மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை

Couplet

Though things are arduous deemed, there's nought may not be won,When work with mind's unslumbering energy and thought is done

Explanation

There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour