thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalபொச்சாவாமைPochchaavaamai
குறள் 536

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை

வாயின் அதுவொப்பது இல்.

Izhukkaamai Yaarmaattum Endrum Vazhukkaamai

Vaayin Adhuvoppadhu Il

Forget none; watch with wakeful care Miss none; the gain is sans compare

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.

MK (மு.கருணாநிதி)

ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது

Couplet

Towards all unswerving, ever watchfulness of soul retain,Where this is found there is no greater gain

Explanation

There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons