thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalபொச்சாவாமைPochchaavaamai
குறள் 535

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை

பின்னூறு இரங்கி விடும்.

Munnurak Kaavaadhu Izhukkiyaan Thanpizhai

Pinnooru Irangi Vitum

Failing foresight the guardless man Shall rue his folly later on

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.

SP (சாலமன் பாப்பையா)

துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.

MK (மு.கருணாநிதி)

முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்

Couplet

To him who nought foresees, recks not of anything,The after woe shall sure repentance bring

Explanation

The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault