thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalதெரிந்து வினையாடல்Therindhuvinaiyaatal
குறள் 520

நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடா துலகு.

Naatorum Naatuka Mannan Vinaiseyvaan

Kotaamai Kotaa Thulaku

Worker straight the world is straight The king must look to this aright

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

MK (மு.கருணாநிதி)

உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும் எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்

Couplet

Let king search out his servants' deeds each day;When these do right, the world goes rightly on its way

Explanation

Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly