thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalதெரிந்து வினையாடல்Therindhuvinaiyaatal
குறள் 519

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்கும் திரு.

Vinaikkan Vinaiyutaiyaan Kenmaive Raaka

Ninaippaanai Neengum Thiru

Who do duty for duty's sake Doubt them; and fortune departs quick

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

SP (சாலமன் பாப்பையா)

தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.

MK (மு.கருணாநிதி)

எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்

Couplet

Fortune deserts the king who ill can bear,Informal friendly ways of men his tolls who share

Explanation

Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties