thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalதெரிந்து வினையாடல்Therindhuvinaiyaatal
குறள் 518

வினைக் குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல்.

Vinaik Kurimai Naatiya Pindrai

Avanai Adharkuriya Naakach Cheyal

His fitness for the duty scan Leave him to do the best he can

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.

MK (மு.கருணாநிதி)

ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்

Couplet

As each man's special aptitude is known,Bid each man make that special work his own

Explanation

Having considered what work a man is fit for, let (the king) employ him in that work