பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
Patratra Kannum Pazhaimaipaa Raattudhal
Sutraththaar Kanne Ula
Let fortunes go; yet kinsmen know The old accustomed love to show
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
SP (சாலமன் பாப்பையா)
ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.
MK (மு.கருணாநிதி)
ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்
Couplet
When wealth is fled, old kindness still to show,Is kindly grace that only kinsmen know
Explanation
Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness)