thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalதெரிந்து தெளிதல்Therindhudhelidhal
குறள் 507

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்

பேதைமை எல்லாந் தரும்.

Kaadhanmai Kandhaa Arivariyaarth Therudhal

Pedhaimai Ellaan Tharum

On favour leaning fools you choose; Folly in all its forms ensues

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.

SP (சாலமன் பாப்பையா)

அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.

MK (மு.கருணாநிதி)

அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்

Couplet

By fond affection led who trusts in men of unwise soul,Yields all his being up to folly's blind control

Explanation

Yields all his being up to folly's blind control