thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalதெரிந்து தெளிதல்Therindhudhelidhal
குறள் 506

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி.

Atraaraith Therudhal Ompuka Matravar

Patrilar Naanaar Pazhi

Choose not those men without kinsmen Without affine or shame of sin

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.

SP (சாலமன் பாப்பையா)

உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.

MK (மு.கருணாநிதி)

நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்

Couplet

Beware of trusting men who have no kith of kin;No bonds restrain such men, no shame deters from sin

Explanation

Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and thereforehave no fear of crime