தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
Theraan Piranaith Thelindhaan Vazhimurai
Theeraa Itumpai Tharum
To trust an untried stranger brings Endless troubles on all our kins
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.
SP (சாலமன் பாப்பையா)
நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.
MK (மு.கருணாநிதி)
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்
Couplet
Who trusts an untried stranger, brings disgrace,Remediless, on all his race
Explanation
Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known