thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalபெரியாரைத் துணைக்கோடல்Periyaaraith Thunaikkotal
குறள் 447

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே

கெடுக்குந் தகைமை யவர்.

Itikkun Thunaiyaarai Yaalvarai Yaare

Ketukkun Thakaimai Yavar

No foe can foil his powers whose friends reprove him when he errs

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

SP (சாலமன் பாப்பையா)

தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?

MK (மு.கருணாநிதி)

இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?

Couplet

What power can work his fall, who faithful ministersEmploys, that thunder out reproaches when he errs

Explanation

Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?