thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalபெரியாரைத் துணைக்கோடல்Periyaaraith Thunaikkotal
குறள் 446

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்த தில்.

Thakkaa Rinaththanaaith Thaanozhuka Vallaanaich

Chetraar Seyakkitandha Thil

To move with worthy friends who knows Has none to fear from frightful foes

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.

MK (மு.கருணாநிதி)

அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது

Couplet

The king, who knows to live with worthy men allied,Has nought to fear from any foeman's pride

Explanation

There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men