thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்ArasiyalஅறிவுடைமைArivutaimai
குறள் 428

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

Anjuva Thanjaamai Pedhaimai Anjuvadhu

Anjal Arivaar Thozhil

Fear the frightful and act wisely Not to fear the frightful's folly

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

SP (சாலமன் பாப்பையா)

பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.

MK (மு.கருணாநிதி)

அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்

Couplet

Folly meets fearful ills with fearless heart;To fear where cause of fear exists is wisdom's part

Explanation

Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared