பொருட்பால்Porutpaalஅரசியல்ArasiyalஅறிவுடைமைArivutaimai
குறள் 429
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
Edhiradhaak Kaakkum Arivinaark Killai
Adhira Varuvadhor Noi
No frightful evil shocks the wise Who guard themselves against surprise
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
SP (சாலமன் பாப்பையா)
நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.
MK (மு.கருணாநிதி)
வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது
Couplet
The wise with watchful soul who coming ills foresee;From coming evil's dreaded shock are free
Explanation
No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils