thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்ArasiyalஅறிவுடைமைArivutaimai
குறள் 427

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.

Arivutaiyaar Aava Tharivaar Arivilaar

Aqdhari Kallaa Thavar

The wise foresee what is to come The unwise lack in that wisdom

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

SP (சாலமன் பாப்பையா)

அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.

MK (மு.கருணாநிதி)

ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்

Couplet

The wise discern, the foolish fail to see,And minds prepare for things about to be

Explanation

The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise