thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகல்லாமைKallaamai
குறள் 407

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை யற்று.

Nunmaan Nuzhaipulam Illaan Ezhilnalam

Manmaan Punaipaavai Yatru

Like painted clay-doll is his show Grand subtle lore who fails to know

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

SP (சாலமன் பாப்பையா)

நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.

MK (மு.கருணாநிதி)

அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்

Couplet

Who lack the power of subtle, large, and penetrating sense,Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence

Explanation

The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll