thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகல்லாமைKallaamai
குறள் 408

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட் ட திரு.

Nallaarkan Patta Varumaiyin Innaadhe

Kallaarkan Patta Thiru

Wealth in the hand of fools is worse Than a learned man's empty purse

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.

SP (சாலமன் பாப்பையா)

படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.

MK (மு.கருணாநிதி)

முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்

Couplet

To men unlearned, from fortune's favour greater-evil springsThan poverty to men of goodly wisdom brings

Explanation

Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned