உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
Ularennum Maaththiraiyar Allaal Payavaak
Kalaranaiyar Kallaa Thavar
People speak of untaught minds \"They just exist like barren lands\"
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
SP (சாலமன் பாப்பையா)
படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
MK (மு.கருணாநிதி)
கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்
Couplet
'They are': so much is true of men untaught;But, like a barren field, they yield us nought
Explanation
The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist