thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகல்விKalvi
குறள் 392

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum

Kannenpa Vaazhum Uyirkku

Letter, number, art and science Of living kind both are the eyes

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

SP (சாலமன் பாப்பையா)

வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.

MK (மு.கருணாநிதி)

எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்

Couplet

The twain that lore of numbers and of letters giveAre eyes, the wise declare, to all on earth that live

Explanation

Letters and numbers are the two eyes of man