thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகல்விKalvi
குறள் 391

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

Karka Kasatarak Karpavai Katrapin

Nirka Adharkuth Thaka

Lore worth learning, learn flawlessly Live by that learning thoroughly

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

SP (சாலமன் பாப்பையா)

கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.

MK (மு.கருணாநிதி)

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்

Couplet

So learn that you may full and faultless learning gain,Then in obedience meet to lessons learnt remain

Explanation

Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning