அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.
Araththaan Varuvadhe Inpam Mar
Rellaam Puraththa Pukazhum Ila
Weal flows only from virtue done The rest is rue and renown gone
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
SP (சாலமன் பாப்பையா)
அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா
MK (மு.கருணாநிதி)
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது
Couplet
What from virtue floweth, yieldeth dear delight;All else extern, is void of glory's light
Explanation
Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise