thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalஅறன் வலியுறுத்தல்Aran Valiyuruththal
குறள் 38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.

Veezhnaal Pataaamai Nandraatrin Aqdhoruvan

Vaazhnaal Vazhiyataikkum Kal

Like stones that block rebirth and pain Are doing good and good again

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

SP (சாலமன் பாப்பையா)

அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

MK (மு.கருணாநிதி)

பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்

Couplet

If no day passing idly, good to do each day you toil,A stone it will be to block the way of future days of moil

Explanation

If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births