thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஊழியல்Oozhiyalஊழ்Oozh
குறள் 380

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்.

Oozhir Peruvali Yaavula Matrondru

Soozhinun Thaanmun Thurum

What power surpasses fate? Its will Persists against the human skill

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

SP (சாலமன் பாப்பையா)

விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?

MK (மு.கருணாநிதி)

இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?

Couplet

What powers so great as those of Destiny? Man's skillSome other thing contrives; but fate's beforehand still

Explanation

What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought)