thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalஇறைமாட்சிIraimaatchi
குறள் 381

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு.

Pataikuti Koozhamaichchu Natparan Aarum

Utaiyaan Arasarul Eru

People, troops, wealth, forts, council, friends Who owns these six is lion of kings

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.

SP (சாலமன் பாப்பையா)

வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.

MK (மு.கருணாநிதி)

ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்

Couplet

An army, people, wealth, a minister, friends, fort: six things-Who owns them all, a lion lives amid the kings

Explanation

He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings