thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஊழியல்Oozhiyalஊழ்Oozh
குறள் 379

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

அல்லற் படுவ தெவன்?

Nandraangaal Nallavaak Kaanpavar Andraangaal

Allar Patuva Thevan?

Who good in time of good perceive In evil time why should they grieve?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ.

SP (சாலமன் பாப்பையா)

நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?

MK (மு.கருணாநிதி)

நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?

Couplet

When good things come, men view them all as gain;When evils come, why then should they complain

Explanation

How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?