துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.
Thurappaarman Thuppura Villaar Urarpaala
Oottaa Kazhiyu Menin
The destitute desire will quit If fate with ills visit them not
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.
SP (சாலமன் பாப்பையா)
துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.
MK (மு.கருணாநிதி)
நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்
Couplet
The destitute with ascetics merit share,If fate to visit with predestined ills would spare
Explanation
The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away