தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
Thalaippattaar Theerath Thurandhaar Mayangi
Valaippattaar Matrai Yavar
Who renounce all are free from care Others suffer delusive snare
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.
SP (சாலமன் பாப்பையா)
ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.
MK (மு.கருணாநிதி)
அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள் அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்
Couplet
Who thoroughly 'renounce' on highest height are set;The rest bewildered, lie entangled in the net
Explanation
Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births